தமிழக செய்திகள்

5 செல்போன் கோபுரங்களை காணவில்லை

கோபி பகுதியில் 5 செல்போன் கோபுரங்களை காணவில்லை.

தினத்தந்தி

கடத்தூர்:

சென்னை கீழ்ப்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் கோசலகுமார் (வயது 49). இவர் சென்னையில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் பிராஜெக்ட் என்ஜினீயராக பணியாற்றி வருகிறார்.

இந்த நிலையில் அந்த தனியார் நிறுவனம் கடந்த 2010-ம் ஆண்டு செல்போன் நிறுவனத்துக்கு சொந்தமான சொத்துக்களை வாங்கி உள்ளது. அதில் கோபி அருகே உள்ள ஒத்தகுதிரை, தண்ணீர்பந்தல் புதூர், நல்லகவுண்டன்பாளையம், கள்ளிப்பட்டி பிரிவு மற்றும் மொடச்சூர் ராஜன்நகர் ஆகிய 5 இடங்களில் செல்போன் நிறுவனம் அமைந்திருந்த செல்போன் கோபுரம் மற்றும் கட்டுப்பாட்டு அறையை சுமார் ரூ.1 கோடிக்கு விலைக்கு வாங்கி உள்ளது.

இவை அனைத்தும் கடந்த 2017-ம் ஆண்டு வரை பயன்பாட்டில் இருந்த நிலையில் அதன் பின்னர் இயங்கவில்லை. இதனால் தனியார் நிறுவனத்தின் பிராஜெக்ட் என்ஜினீயர் கோபி மற்றும் சுற்றுப்புற பகுதியில் வாங்கப்பட்ட செல்போன் கோபுரங்கள் இயங்காமல் போனது குறித்து ஆய்வு செய்தார். அப்போது 5 இடங்களில் பொருத்தப்பட்டு இருந்த டவர்கள் காணாமல் போயிருப்பது தெரிய வந்தது

அதைத்தொடர்ந்து அவர் காணாமல் போன செல்போன் கோபுரங்களை கண்டுபிடித்து தருமாறு கோபியில் உள்ள குற்றவியல் நீதித்துறை நடுவர் எண் 1-ல் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த கோர்ட்டு உத்தரவின் அடிப்படையில் கோபி போலீசார் வழக்கு பதிவு செய்து காணாமல் போன 5 செல்போன் கோபுரங்களை தேடி வருகின்றனர்.

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது