தமிழக செய்திகள்

கடலில் மூழ்கி உயிரிழந்த 4 பெண்கள் குடும்பத்திற்கு தலா ரூ.3 லட்சம் நிவாரணம்: மு.க.ஸ்டாலின் உத்தரவு

பெரியகுப்பம் கடற்கரை பகுதியில் குளித்துக்கொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக 4 பெண்கள் கடலில் மூழ்கி உயிரிழந்தனர்.

தினத்தந்தி

சென்னை,

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது:-

திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி பெத்திகுப்பம் கிராமத்தில் உள்ள இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் வசித்து வந்த தேவகி, நம் பாளையத்தைச் சேர்ந்த பவானி, சின்ன கோபாலபுரம்-பெரிய கோபாலபுரத்தைச் சேர்ந்த ஷாலினி மற்றும் திருவல்லிகாலனியைச் சேர்ந்த காயத்ரி ஆகிய 4 பெண்களும் சென்னைக்கு அருகிலுள்ள எண்ணூர், பெரியகுப்பம் கடற்கரை பகுதியில் குளித்துக்கொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக மேற்படி நால்வரும் கடலில் மூழ்கி உயிரிழந்தனர். இந்த துயரகரமான செய்தியை அறிந்து மிகவும் அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தேன்.

மேலும், இச்சம்பவத்தில் உயிரிழந்த 4 பெண்களின் குடும்பத்தினருக்கும், அவர்களது உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக்கொள்வதோடு, உயிரிழந்த நால்வரின் குடும்பத்தினருக்கும் தலா ரூ.3 லட்சம் ரூபாய் முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கவும் உத்தரவிட்டுள்ளேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து