தமிழக செய்திகள்

மு.க. ஸ்டாலினின் முதல் அமைச்சர் கனவு கனவாகவே இருக்கும்; அமைச்சர் கடம்பூர் ராஜு பேட்டி

மு.க. ஸ்டாலினின் முதல் அமைச்சர் கனவு கனவாகவே இருக்கும் என அமைச்சர் கடம்பூர் ராஜு கூறியுள்ளார்.

தூத்துக்குடியில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் கடம்பூர் ராஜு, தமிழகத்தில் வறட்சி ஏற்பட்டாலும், மழை வந்தபோதிலும் ஆட்சி கலைய வேண்டும் என்பதே மு.க. ஸ்டாலினின் நோக்கம் ஆக இருக்கிறது.

முதல் அமைச்சர் ஆக வேண்டும் என்ற ஸ்டாலினின் கனவு கனவாகவே இருக்கும் என கூறினார்.

ஜெயா தொலைக்காட்சி நிறுவனம் மற்றும் சசிகலாவின் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் வீடுகளில் நடைபெறும் சோதனை பற்றி பேசிய அவர், கிடைக்கும் தகவல்கள் அடிப்படையிலேயே வருமான வரி சோதனை நடந்து வருகிறது. இந்த சோதனைக்கும், அரசுக்கும் எந்த தொடர்புமில்லை என்றும் கூறியுள்ளார்.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்