சென்னை,
தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் கூறி இருப்பதாவது:-
தேசிய விளையாட்டு நாளில் நம்முடைய விளையாட்டு வீரர்களின் சாதனைகளை நினைவுகூர்ந்து, இளம் திறமையாளர்கள் புதிய சாதனைகளை படைக்கவும் ஊக்குவிப்போம்.
ராஜீவ்காந்தி கேல் ரத்னா விருது பெற்ற தங்கவேலு மாரியப்பன் மற்றும் தயான்சந்த் விருது பெற்ற ரஞ்சித்குமார் ஆகியோரை நெஞ்சார வாழ்த்துகிறேன்.
இவ்வாறு அதில் மு.க.ஸ்டாலின் பதிவிட்டுள்ளார்.