தமிழக செய்திகள்

கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் கட்டப்படும் ராஜகோபுரம் மாதிரி வரைபடம் அறங்காவலர் குழு தலைவரிடம் ஒப்படைப்பு

கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் கட்டப்படும் ராஜகோபுரம் மாதிரி வரைபடம் அறங்காவலர் குழு தலைவரிடம் ஒப்படைக்கப்பட்டது.

கன்னியாகுமரி:

கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் கட்டப்படும் ராஜகோபுரம் மாதிரி வரைபடம் அறங்காவலர் குழு தலைவரிடம் ஒப்படைக்கப்பட்டது.

பகவதி அம்மன் கோவில்

கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளும், பக்தர்களும் வந்து அம்மனை தரிசனம் செய்து செல்கிறார்கள்.

3 ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த, பரசுராமரால் கட்டப்பட்ட இந்த கோவிலில் ராஜகோபுரம் அஸ்திவாரத்தோடு நின்று போனதை மீண்டும் கட்டும் பணியை தொடங்குவதற்காக தேவ பிரசன்னம் பார்க்கும் நிகழ்ச்சி கோவிலில் உள்ள கொலு மண்டபத்தில் சில நாட்களுக்கு முன் நடந்தது.

ராஜகோபுரம்

அப்போது கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலின் வடக்கு வாசலில் 9 நிலையுடன் கூடிய 120 அடி உயர ராஜ கோபுரமும், கிழக்கு வாசலில் சாலக்கார கோபுரமும் கட்டிக் கொள்ளலாம்.

அதற்கு முன்னதாக கணபதி ஹோமமும், மிருத்யுஞ்சய ஹோமமும் நடத்த வேண்டும் என்றும், மூலஸ்தானமாக விளங்கும் 24-வது சக்தி பீடத்தில் அமைந்துள்ள பத்திரகாளி அம்மன் கோவிலில் திருப்பணிகள் செய்து கும்பாபிஷேகம் நடத்திவிட்டு ராஜகோபுரம் கட்டும் பணியை தொடங்க வேண்டும். சித்திரை மாதத்தில் ராஜகோபுரம் கட்டும் பணியை தொடங்கலாம் என்று தேவ பிரசன்னத்தில் கூறப்பட்டது.

அதைத்தொடர்ந்து முதல் கட்டமாக தொல்லியல் துறை ஆலோசகர் மணி தலைமையில் அதிகாரிகள் குழுவினர் பகவதி அம்மன் கோவிலில் ராஜகோபுரம் கட்டப்பட உள்ள இடத்தை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

ராஜகோபுரம் மாதிரி வரைபடம்

அதைத்தொடர்ந்து ராஜகோபுரம் மாதிரி வரைபடம் தயாரிக்கப்பட்டு உள்ளது. இந்த ராஜகோபுரம் 9 நிலையுடன் 120 அடி உயரத்திலும் 66 அடி நீளத்திலும் 40 அடி அகலத்திலும் கட்டப்பட உள்ளது. இதன் மாதிரி வரைபடத்தை குமரி மாவட்ட அறங்காவலர் குழு தலைவர் பிரபா ராமகிருஷ்ணனிடம் வழங்கப்பட்டது.

அதைத்தொடர்ந்து முதல் கட்டமாக ராஜகோபுரம் கட்டும் பணி நல்ல முறையில் நடை பெற வேண்டி கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் இன்று (வெள்ளிக்கிழமை) காலை கணபதி ஹோமம் நடைபெறுகிறது.

கடந்த ஆண்டில் 18 ஆயிரம் முகாம்கள் மூலம் 2.22 கோடி பேருக்கு வேலை - மத்திய அரசு தகவல்

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...