தமிழக செய்திகள்

"மாதிரி பள்ளிகள் தேர்வை ஏற்க முடியாது" - ஜாக்டோ ஜியோ அமைப்பு குற்றச்சாட்டு

தமிழ்நாட்டில் மாதிரி பள்ளிகளுக்கு நடைபெற்ற தேர்வு, சமச்சீர் கல்வி கொள்கைக்கு எதிரானது என்பதால், அதை ஏற்க முடியாது என ஜாக்டோ ஜியோ அமைப்பு தெரிவித்துள்ளது.

தினத்தந்தி

சென்னை.

தமிழ்நாட்டில் மாதிரி பள்ளிகளுக்கு நடைபெற்ற தேர்வு, சமச்சீர் கல்வி கொள்கைக்கு எதிரானது என்பதால், அதை ஏற்க முடியாது என ஜாக்டோ ஜியோ அமைப்பு தெரிவித்துள்ளது. பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தக்கோரி சென்னை டிபிஐ வளாகத்தில் ஜாக்டோ ஜியோ அமைப்பின் சார்பில் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது.

அதில் செய்தியாளர்களை சந்தித்த ஜாக்டோ ஜியோ அமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர் மயில், தமிழக அரசு தேசிய கல்வி கொள்கையில் உள்ள அம்சங்களை அமல்படுத்தி வருவதாகவும், அதனடிப்படையில் மாவட்டந்தோறும் மாதிரி பள்ளிகள் தொடங்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.

மேலும், திமுக தேசிய கல்விக் கொள்கையை எதிர்ப்பதாக கூறிவிட்டு, மறைமுகமாக ஆதரிப்பதாகவும் குற்றம் சாட்டினர்.

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து

ஜன.30-ல் மேற்கு வங்காளம் செல்கிறார் அமித்ஷா

2047-ம் ஆண்டிற்குள் இந்தியாவில் 400 விமான நிலையங்கள்: பிரதமர் மோடி

7 முறை எம்.எல்.ஏ... அஜித் பவாரின் குடும்ப, அரசியல் வாழ்க்கை விவரம் வெளியீடு

காரைக்காலில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை