தமிழக செய்திகள்

கரடி தாக்கிய பெண்ணுக்கு நவீன அறுவை சிகிச்சை

வால்பாறை அரசு ஆஸ்பத்திரியில் கரடி தாக்கிய பெண்ணுக்கு நவீன அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.

தினத்தந்தி

வால்பாறை அருகே உள்ள மாணிக்கா எஸ்டேட் பகுதியில் நேற்று முன்தினம் தேயிலை தோட்ட பணியில் ஈடுபட்டு இருந்த 2 வடமாநில பெண் தொழிலாளர்களை கரடி தாக்கியது. இதில் சுமதிகுமாரி(வயது 25) என்ற பெண்ணுக்கு இடது கால் பாதத்தில் எலும்பு முறிந்தது. அவர், வால்பாறை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். இங்கு தீவிர சிகிச்சை மற்றும் அறுவை சிகிச்சைக்கு வரும் நோயாளிகளை பொள்ளாச்சி, கோவை அரசு ஆஸ்பத்திரிகளுக்கு அனுப்பி வைப்பது வழக்கம். ஆனால் கரடி தாக்கிய பெண்ணுக்கு வால்பாறை அரசு ஆஸ்பத்திரியிலேயே நவீன முறையில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.

எலும்பு முறிவு சிறப்பு சிகிச்சை நிபுணர் டாக்டர் சரண் தலைமையிலான குழுவினர் நவீன முறையில் அறுவை சிகிச்சை செய்து உடைந்த எலும்புகளை சரி செய்தனர். அவர்களுக்கு, அனைத்து தரப்பினரும் பாராட்டு தெரிவித்தனர்.

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு