தென்காசி,
திருநெல்வேலி மின்பகிர்மான வட்டம், தென்காசி மாவட்டம், தென்காசி கோட்டத்திற்கு உட்பட்ட கீழப்பாவூர், அச்சன்புதூர் ஆகிய துணைமின் நிலையங்களில் மின்வாரிய மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை மறுநாள் (16.6.2026, செவ்வாய்க்கிழமை) மின்தடை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தென்காசி கோட்ட செயற்பொறியாளர் ஸ்ரீவனஜா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
கீழப்பாவூர் மற்றும் அச்சன்புதூர் துணைமின் நிலையங்களில் நாளை மறுநாள் (16.6.2026, செவ்வாய்க்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் செய்திட உத்தேசிக்கப்பட்டுள்ளதால் பின்வரும் ஊர்கள் மற்றும் அதனை சார்ந்த பகுதிகளில், அச்சன்புதூரில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மற்றும் கீழப்பாவூரில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்விநியோகம் இருக்காது.
பாவூர்சத்திரம், கீழப்பாவூர், மேலப்பாவூர், குலசேகரப்பட்டி, குறும்பலாப்பேரி, நாட்டார்பட்டி, ஆவுடையானூர், வெய்காலிப்பட்டி, சின்னநாடானூர், திப்பணம்பட்டி, செட்டியூர், பெத்தநாடார்பட்டி, கரிசலூர், செல்லத்தாயார்புரம், மகிழ்வண்ணநாதபுரம், அடைக்கலப்பட்டினம் வடக்கு, சாலைப்புதூர்.
வடகரை, அச்சன்புதூர், நெடுவயல், வாவா நகரம், காசி தர்மம், பண்பொழி, மேக்கரை, கரிசல் குடியிருப்பு ஆகிய இடங்களில் மின்தடை செய்யப்படும்.
இவ்வாறு அவர் தெரவித்துள்ளார்.