தூத்துக்குடி,
தூத்துக்குடி ஊரக உட்கோட்டத்திற்குட்பட்ட விளாத்திகுளம், குளத்தூர், சூரங்குடி துணை மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக மின்தடை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக தூத்துக்குடி ஊரக கோட்ட செயற்பொறியாளர் சின்னத்துரை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் தூத்துக்குடி ஊரகக் கோட்டத்திற்குட்பட்ட விளாத்திகுளம், குளத்தூர், சூரங்குடி துணை மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளதால் நாளை மறுநாள் (8.8.2026, சனிக்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை பின்வரும் பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்படும்.
விளாத்திகுளம், மந்திகுளம், செங்கல்படை, கமலாபுரம், பிள்ளையார்நத்தம், பேரிலோவன்பட்டி, அயன்பொம்மையாபுரம், ராமசந்திராபுரம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள ஊர்கள்.
குளத்தூர், கீழவைப்பார், வைப்பார், வேப்பலோடை, மார்த்தாண்டம்பட்டி, முள்ளூர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள ஊர்கள்.
மேல்மாந்தை, ஈ.வேலாயுதபுரம், வேம்பார், பச்சையாபுரம், அரியநாயகிபுரம் மற்றும் அதனை சுற்றியுள்ள ஊர்களில் மின் விநியோகம் இருக்காது.
எனவே பொதுமக்கள் மற்றும் வணிக நிறுவனங்கள் இந்த மின்நிறுத்த அறிவிப்பைக் கருத்தில் கொண்டு தேவையான முன்னேற்பாடுகளை செய்து கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.