தமிழக செய்திகள்

மூணாறு நிலச்சரிவு: மீட்பு பணியில் தேவையான உதவிகளை செய்ய தயார் - கேரள முதல்-மந்திரியிடம் எடப்பாடி பழனிசாமி உறுதி

மூணாறு நிலச்சரிவு தொடர்பான, மீட்பு பணியில் தேவையான உதவிகளை செய்ய தயார் என கேரள முதல்-மந்திரியிடம் எடப்பாடி பழனிசாமி உறுதி அளித்துள்ளார்.

தினத்தந்தி

சென்னை,

கேரள மாநிலம் மூணாறில் பெய்த கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவில், தமிழகத்தை சேர்ந்த 80-க்கும் மேற்பட்ட தேயிலை தோட்ட தொழிலாளர்கள் புதையுண்டனர். நேற்று இரவு வரை 43 பேரின் உடல்கள் சடலமாக மீட்கப்பட்டுள்ளன. இந்த நிலையில், நேற்று காலை தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, கேரள முதல்-மந்திரி பினராயி விஜயனிடம் தொலைபேசியில் பேசினார். அப்போது, மூணாறு சம்பவத்தில் மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகளில் தேவையான உதவிகளை வழங்குவதாக எடப்பாடி பழனிசாமி உறுதியளித்தார்.

இது தொடர்பாக, தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தனது டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:-

கனமழை மற்றும் நிலச்சரிவு காரணமாக மூணாறில் ஏற்பட்ட உயிரிழப்புகள் மற்றும் சேதம் குறித்து காலையில் கேரள முதல்-மந்திரியிடம் பேசினேன். மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகளில் தேவையான உதவிகளை வழங்குவதாக நான் அவரிடம், உறுதியளித்தேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு