தமிழக செய்திகள்

பூந்தமல்லி அருகே கன்டெய்னர் லாரி மீது மொபட் மோதல்; ஓட்டல் ஊழியர் பலி

பூந்தமல்லி அருகே கன்டெய்னர் லாரி மீது மொபட் மோதிய விபத்தில் ஓட்டல் ஊழியர் சம்பவ இடத்திலேயே பலியானார்.

தினத்தந்தி

லாரி-மொபட் மோதல்

பூந்தமல்லி அடுத்த சொக்கநல்லூரை சேர்ந்தவர் ராஜி (வயது 48). ஓட்டலில் சமையல் வேலை செய்து வந்தார். நேற்று முன்தினம் இரவு வேலை முடிந்து, மொபட்டில் வீட்டுக்கு வந்து கொண்டிருந்தார். வண்டலூர் - மீஞ்சூர் வெளிவட்ட சாலையில், பூந்தமல்லி அடுத்த நசரத்பேட்டை அருகே வரும் போது முன்னால் சென்று கொண்டிருந்த கன்டெய்னர் லாரி திடீரென பின்நோக்கி வந்ததால் கட்டுப்பாட்டை இழந்த மொபட், கன்டெய்னர் லாரி மீது மோதியது.

ஓட்டல் ஊழியர் பலி

இந்த விபத்தில் ராஜி, மொபட்டில் இருந்து தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். விபத்தை ஏற்படுத்திய லாரி டிரைவர், லாரிய அங்கேயே நிறுத்தி விட்டு தப்பி ஓடிவிட்டார். இந்த சம்பவம் குறித்து ஆவடி போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு வந்த போலீசார், பலியான ராஜி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு போரூரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்

மேலும் இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி சென்ற கன்டெய்னர் லாரி டிரைவரை தேடி வருகின்றனர்.

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு