தமிழக செய்திகள்

மொபட் திருட்டு

மொபட் திருட்டு போனது

அம்பை:

அம்பை புதுஅம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் பால்துரை (வயது 31). கூலித்தொழிலாளி. இவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு தெற்கு வீரவநல்லூர் பகுதியில் உள்ள சூப்பர் மார்க்கெட்டில் பொருட்கள் வாங்குவதற்காக மொபட்டை நிறுத்திவிட்டு சென்றார். அப்போது அந்த மொபட் திருட்டு போனது. இதுகுறித்து வீரவநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து மொபட்டை திருடி சென்ற மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.