தமிழக செய்திகள்

ஸ்ரீபெரும்புதூர் அருகே மொபட்- லாரி மோதல்; சென்னையை சேர்ந்த மாமியார், மருமகன் சாவு

ஸ்ரீபெரும்புதூர் அருகே மொபட்- லாரி மோதிய விபத்தில் சென்னையை சேர்ந்த மாமியார், மருமகன் பரிதாபமாக இறந்தனர்.

தினத்தந்தி

சென்னை போரூர் அடுத்த பூதான்பட்டு பகுதியை சேர்ந்தவர் அம்மையப்பன் (வயது 42). இவரது மாமியார் பெத்தனாச்சி (57). இவர்கள் நேற்று மோட்டார் சைக்கிளில் காஞ்சீபுரம் சென்றுவிட்டு வீடு திருப்பினர். சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை ஸ்ரீபெரும்புதூர் சுங்கச்சாவடி அருகே வந்தபோது பின்னால் வந்த லாரி மொபட் மீது மோதி விபத்துக்குள்ளானது.

இதில் அம்மையப்பன், பெத்தனாச்சி இருவரும் தூக்கி வீசபட்டு பலத்த காயம் அடைந்து சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் துடி துடித்து இறந்தனர். இது குறித்து தகவல் அறிந்த ஸ்ரீபெரும்புதூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரமேஷ் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விபத்தில் இறந்த இருவரின் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஸ்ரீபெரும்புதூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். லாரி டிரைவரை போலீசார் தேடி வருகின்றனர்.

காஞ்சீபுரம் மாவட்டம் உத்திரமேரூரை அடுத்த பருத்தி கொள்ளை அருகே நேற்று மதியம் 2 மணி அளவில் 50 வயதான ஆண் நபர் ஒருவர் மொபட்டில் வந்து கொண்டிருந்தார். அந்த மொபட் எதிரே வந்த தனியார் நிறுவன பஸ் மீது மோதியது. இதில் அந்த நபர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். அவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என்பது தெரியவில்லை.

அவர் ஓட்டி வந்த மொபட்டில் பதிவு எண் இல்லை. அவர் எந்த பகுதியை சேர்ந்தவர் என்று தீவிரமாக விசாரித்து வருகின்றனர். இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தனியார் நிறுவன பஸ் டிரைவர் குமாரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்