தமிழக செய்திகள்

லாரி மீது மோட்டார் சைக்கிள் மோதல்; ஒருவர் பலி

லாரி மீது மோட்டார் சைக்கிள் மோதல்; ஒருவர் பலியானார்.

கந்தர்வகோட்டை அருகே பழைய கந்தர்வகோட்டை கிராமத்தை சேர்ந்தவர் குருமூர்த்தி (வயது 53). இவர் தஞ்சை-புதுகை தேசிய நெடுஞ்சாலையில் காடவராயன் பட்டி அருகில் உள்ள தனியார் பெட்ரோல் விற்பனை நிலையத்தில் ஊழியராக பணிபுரிந்து வந்தார். இந்த நிலையில் இன்று இரவு பணி முடிந்து வீட்டிற்கு மோட்டார் சைக்கிளில் குருமூர்த்தி சென்று கொண்டிருந்தார். அப்போது டால்கேட் அருகில் பழுதாகி நின்று கொண்டிருந்த லாரி மீது குருமூர்த்தி ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் எதிர்பாராதவிதமாக மோதியது. இதில் படுகாயமடைந்த அவர் சம்பவ இடத்திலேய பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த கந்தர்வகோட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து குருமூர்த்தியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.

சீர்திருத்த விரைவு ரெயிலில் ஏறி நாடு பயணிக்கிறது: பிரதமர் மோடி

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்