தமிழக செய்திகள்

மோட்டார் சைக்கிள்-அரசு பஸ் மோதல்

பெரியகுளம் அருகே மோட்டார் சைக்கிளும், அரசு பஸ் மோதியதில் 2 பேர் படுகாயம் அடைந்தனர்.

தினத்தந்தி

பெரியகுளம் அருகே உள்ள கைலாசப்பட்டியை சேர்ந்தவர் முனியாண்டி (வயது 21). இவர் கைலாசப்பட்டியில் இருந்து மோட்டார் சைக்கிளில் தேனிக்கு சென்று கொண்டிருந்தார். அவருடன் அதே பகுதியை சேர்ந்த உறவினர் மகன் சக்திவேல் பாண்டியன் (11) சென்றான். அப்போது சருத்துப்பட்டி அருகே கம்பத்திலிருந்து திருச்சி நோக்கி சென்ற அரசு பஸ், மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் முனியாண்டி, சக்திவேல் பாண்டியன் ஆகியோர் படுகாயம் அடைந்தனர். காயமடைந்த இருவரையும் அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். இச்சம்பவம் குறித்து தென்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்து,விசாரணை நடத்தி வருகின்றனர்.

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை