தமிழக செய்திகள்

மோட்டார் சைக்கிள் திருட்டு

மோட்டார் சைக்கிளை திருடிச் சென்ற மர்ம நபரை போலீசார் தேடி வருகிறார்கள்.

தினத்தந்தி

தக்கலை:

தக்கலை அருகே உள்ள முத்தலக்குறிச்சி பகுதியை சேர்ந்தவர் ராஜரெத்தினம் (வயது52). இவர் தக்கலையில் பர்னிச்சர் கடை நடத்தி வருகிறார். சம்பவத்தன்று மதியம் வீட்டிற்கு சென்று சாப்பிட்டு விட்டு மீண்டும் கடைக்கு வந்த ராஜரெத்தினம் தனது மோட்டார் சைக்கிளை கடையின் முன்பு நிறுத்தினார். மாலையில் கடையில் இருந்து வெளியே வந்து பார்த்தபோது, மோட்டார் சைக்கிள் மாயமாகி இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். அக்கம் பக்கத்தில் தேடிப்பார்த்தும் கிடைக்கவில்லை. யாரோ மர்ம நபர்கள் மோட்டார் சைக்கிளை திருடிச் சென்றது தெரியவந்தது. இதுகுறித்து ராஜரெத்தினம் தக்கலை போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபரை தேடி வருகிறார்கள்.  

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்