கோப்புப்படம் 
தமிழக செய்திகள்

படுக்கை வசதி பெட்டிகள் முன்பதிவில்லாத பெட்டிகளாக இயக்கம் - தெற்கு ரெயில்வே அறிவிப்பு

படுக்கை வசதி பெட்டிகள் முன்பதிவில்லாத பெட்டிகளாக இயக்கப்படுவதாக தெற்கு ரெயில்வே தெரிவித்துள்ளது.

தினத்தந்தி

சென்னை,

குறிப்பிட்ட சில ரெயில்களில் படுக்கை வசதி பெட்டிகள் முன்பதிவில்லாத பெட்டிகளாக இயக்கப்படுவதாக தெற்கு ரெயில்வே தெரிவித்துள்ளது.

இதுகுறித்து தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

கீழ்கண்ட எக்ஸ்பிரஸ் ரெயில்களில் தேர்ந்தெடுக்கப்பட்ட படுக்கை வசதி பெட்டிகள், குறிப்பிட்ட சில நகரங்களுக்கிடையே முன்பதிவு செய்யப்படாத பெட்டிகளாக மாற்றப்பட்டுள்ளன.

* கன்னியாகுமரி-புனே (வண்டி எண்: 16382) இடையே இயக்கப்படும் எக்ஸ்பிரஸ் ரெயிலில் வருகிற அக்டோபர் மாதம் 15-ந்தேதி முதல் கன்னியாகுமரி-எர்ணாகுளம் இடையே எஸ்-5 படுக்கை பெட்டி முன்பதிவு செய்யப்படாத பெட்டியாக இயக்கப்படும்.

* மங்களூரு-சென்னை எம்.ஜி.ஆர் சென்டிரல் (22638) இடையே இயக்கப்படும் எக்ஸ்பிரஸ் ரெயிலில் வருகிற அக்டோபர் மாதம் 19-ந்தேதி முதல் ஈரோடு-எம்.ஜி.ஆர் சென்டிரல் இடையே எஸ்-11 படுக்கை பெட்டி முன்பதிவு செய்யப்படாத பெட்டியாக இயக்கப்படும்.

எழும்பூர் - கொல்லம் எக்ஸ்பிரஸ்

* எழும்பூர்-கொல்லம் (16723) இடையே இயக்கப்படும் எக்ஸ்பிரஸ் ரெயிலில் வருகிற அக்டோபர் மாதம் 19-ந்தேதி முதல் நெல்லை-கொல்லம் இடையே எஸ்-10, எஸ்-11 படுக்கை பெட்டிகள் முன்பதிவு செய்யப்படாத பெட்டியாக இயக்கப்படும்.

* கொல்லம்-எழும்பூர் (16724) இடையே இயக்கப்படும் எக்ஸ்பிரஸ் ரெயிலில் வருகிற அக்டோபர் மாதம் 20-ந்தேதி முதல் கொல்லம்-நெல்லை இடையே எஸ்-11 படுக்கை பெட்டி முன்பதிவு செய்யப்படாத பெட்டியாக இயக்கப்படும்.

* எம்.ஜி.ஆர் சென்டிரல்-மங்களூரு (22637) இடையே இயக்கப்படும் எக்ஸ்பிரஸ் ரெயில் வருகிற அக்டோபர் மாதம் 19-ந்தேதி முதல் எம்.ஜி.ஆர் சென்டிரல்-சேலம் இடையே எஸ்-4 படுக்கை பெட்டி முன்பதிவு செய்யப்படாத பெட்டியாக இயக்கப்படும்.

ராமேசுவரம், மங்களூரு எக்ஸ்பிரஸ்

* எழும்பூர்-ராமேசுவரம் (16851) இடையே இயக்கப்படும் எக்ஸ்பிரஸ் ரெயிலில் வருகிற அக்டோபர் மாதம் 24-ந்தேதி முதல் மானாமதுரை-ராமேசுவரம் இடையேவும், ராமேசுவரம்-எழும்பூர் (16852) இடையே இயக்கப்படும் எக்ஸ்பிரஸ் ரெயிலில் வருகிற அக்டோபர் மாதம் 26-ந்தேதி முதல் ராமேசுவரம்-மானாமதுரை இடையேவும் எஸ்-12, எஸ்-13 படுக்கை பெட்டிகள் முன்பதிவு செய்யப்படாத பெட்டிகளாக இயக்கப்படும்.

* எழும்பூர்-மங்களூரு (16159) இடையே இயக்கப்படும் எக்ஸ்பிரஸ் ரெயிலில் வருகிற அக்டோபர் மாதம் 28-ந்தேதி முதல் திருச்சி-மங்களூரு இடையே எஸ்-10 படுக்கை பெட்டி முன்பதிவு செய்யப்படாத பெட்டியாக இயக்கப்படும்.

* மங்களூரு-எழும்பூர் (16160) இடையே இயக்கப்படும் எக்ஸ்பிரஸ் ரெயிலில் வருகிற அக்டோபர் மாதம் 28-ந்தேதி முதல் மங்களூரு-திருச்சி இடையே எஸ்-7 பெட்டியும், மங்களூரு-கரூர் இடையே எஸ்-8, எஸ்-9, எஸ்-10 படுக்கை பெட்டிகளும் முன்பதிவு செய்யப்படாத பெட்டிகளாக இயக்கப்படும்.

தூத்துக்குடி - மைசூரு

* தூத்துக்குடி-மைசூரு (16235) இடையே இயக்கப்படும் எக்ஸ்பிரஸ் ரெயிலில் வருகிற அக்டோபர் மாதம் 28-ந்தேதி முதல் தூத்துக்குடி-மதுரை இடையே எஸ்-10, எஸ்-11 படுக்கை பெட்டிகள் முன்பதிவு செய்யப்படாத பெட்டிகளாக இயக்கப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்