தமிழக செய்திகள்

உலக நன்மை வேண்டி முளைப்பாரி ஊாவலம்

மூங்கில்துறைப்பட்டில் உலக நன்மை வேண்டி முளைப்பாரி ஊாவலம் நடைபெற்றது.

தினத்தந்தி

மூங்கில்துறைப்பட்டு

மூங்கில்துறைப்பட்டு அரசு மேல்நிலைப்பள்ளியின் பின்புறத்தில் ஓம் சக்தி கோவில் உள்ளது. இந்த கோவில் சார்பில் உலக நன்மை வேண்டி நேற்று சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றது. தொடர்ந்து சிறப்பு பூஜைகள் நடைபெற்று, பம்பை உடுக்கை இசையுடன் அப்பகுதியை சேர்ந்த செவ்வாடை பக்தர்கள் முளைப்பாரி, கஞ்சி கலயம், தீச்சட்டி, பூங்கரகம் எடுத்துக்கொண்டு ஊர்வலமாக புறப்பட்டனர். கோவில் முன்பு இருந்து புறப்பட்ட இந்த ஊர்வலம் முக்கிய வீதி வழியாக சென்று மீண்டும் கோவிலுக்கு வந்தடைந்தது. தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. கோவில் சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்