தமிழக செய்திகள்

இசையமைப்பாளர் பரத்வாஜ் அம்பை கோர்ட்டில் ஆஜர்

இசையமைப்பாளர் பரத்வாஜ் அம்பை கோர்ட்டில் ஆஜர் ஆனார்.

தினத்தந்தி

அம்பை:

அம்பை ஒருங்கிணைந்த கோர்ட்டில் லோக் அதாலத் எனும் தேசிய மக்கள் நீதிமன்றம் நேற்று நடைபெற்றது. தாலுகா சட்டப்பணிகள் ஆணை குழுவின் தலைவரும், சார்பு நீதிபதியுமான செந்தில்குமார், மாவட்ட உரிமையியல் நீதிபதி (பொறுப்பு) குமார் ஆகியோர் தலைமை தாங்கினர். அம்பை கோர்ட்டில் நிலுவையில் உள்ள சிறு, குறு குற்ற வழக்குகள், விவாகரத்து வழக்கு, பேசி தீர்க்கக்கூடிய சிவில் வழக்குகள் உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன. இதில் 20-க்கும் மேற்பட்ட வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது.

இதேபோல் தென்காசி மாவட்டம் கடையம் அருகே உள்ள ரவணசமுத்திரத்தை சேர்ந்த பிரபல சினிமா இசையமைப்பாளர் பரத்வாஜ் வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. இதற்காக அவர் நேற்று அம்பை கோர்ட்டில் ஆஜரானார்.

தனது வீடு மற்றும் வீட்டை சுற்றியுள்ள காலிமனையை அனுபவிக்க அரசு அதிகாரிகள் இடையூறு செய்ததாக தாக்கல் செய்த வழக்கில், அவரது மூல ஆவணங்கள் சரியாக உள்ளதால் அவரது இடத்தை அவர் அனுபவிக்க அரசுக்கு ஆட்சேபனை இல்லை என முடிவு செய்யப்பட்டு வழக்கு முடிக்கப்பட்டது. இதில் அரசு வக்கீல் மீனாட்சிநாதன், முன்னாள் அரசு வக்கீல் ராஜாங்கம் மற்றும் வக்கீல்கள், கோர்ட்டு பணியாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு