தமிழக செய்திகள்

முத்துமாரியம்மன் கோவில் குடமுழுக்கு

புளியஞ்சேரி முத்துமாரியம்மன் கோவில் குடமுழுக்கு நடந்தது.

தினத்தந்தி

கபிஸ்தலம்:

சுவாமிமலை அருகே உள்ள பாபுராஜபுரம் ஊராட்சி புளியஞ்சேரி வடக்கு தெருவில் உள்ள முத்துமாரியம்மன் கோவில் குடமுழுக்கு நடந்தது. முன்னதாக கடந்த 24-ந் தேதி முதல் யாகசாலை பூஜை, கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம், லட்சுமி ஹோமம், வாஸ்து சாந்தி, யாகசாலை பூஜைகள் தொடங்கியது. தொடர்ந்து நேற்று 2-ம் கால யாகசாலை பூஜை, மகா பூர்ணாகுதியுடன் மங்கள ஆர்த்தி செய்யப்பட்டு கடங்கள் புறப்பாடாகி கோவில் கோபுர கலசங்களுக்கு புனித நீர் ஊற்றப்பட்டு குடமுழுக்கு நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்