தமிழக செய்திகள்

மயிலாப்பூர், மந்தைவெளி கழிவுநீர் நிலையங்கள் நாளை செயல்படாது - குடிநீர் வாரியம் தகவல்

குழாய் இணைப்பு பணி காரணமாக கழிவுநீர் நிலையங்கள் செயல்படாது என்று சென்னை குடிநீர் வாரியம் தெரிவித்துள்ளது.

சென்னை,

சென்னை குடிநீர் வாரியம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம் சார்பில், தேனாம்பேட்டை மண்டலம், ராமகிருஷ்ணா மடம் சாலையில் மந்தைவெளி பஸ் பணிமனை அருகில் பிரதான கழிவுநீர் குழாய் இணைக்கும் பணி நடைபெற உள்ளது.

எனவே, நாளை (புதன்கிழமை) காலை 10 மணி முதல் இரவு 10 மணி வரை தெற்கு மயிலாப்பூர் கழிவுநீர் உந்து நிலையம், சீதாம்மாள் காலனி கழிவுநீர் உந்து நிலையம் மற்றும் மந்தைவெளி கழிவுநீர் உந்து நிலையம் தற்காலிகமாக செயல்படாது. எனவே, ஆழ்வார்பேட்டை, நந்தனம், அபிராமபுரம், ராஜா அண்ணாமலைபுரம், மயிலாப்பூர், சாந்தோம், மந்தைவெளி ஆகிய இடங்களில் கழிவுநீர் தொடர்பான புகார்களுக்கு 8144930909, 8144930225 ஆகிய எண்களில் தொடர்புகொள்ளலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.