தமிழக செய்திகள்

வீட்டில் இருந்து மாயமான சிறுவன் மீட்பு! கடத்தலில் ஈடுபட்டது யார்? போலீசார் தீவிர விசாரணை

கச்சிராயபாளையம் அருகே வீட்டில் இருந்து மாயமான சிறுவன் 10 நாட்களுக்கு பின்னர் நலமுடன் மீட்கப்பட்டார்.

தினத்தந்தி

கள்ளக்குறிச்சி,

கள்ளக்குறிச்சி மாவட்டம் அக்கராயப்பாளையம் பொட்டியம் சாலையில் வசித்து வருபவர்கள் லோகநாதன் -கௌரி தம்பதி. எல்.கே.ஜி படித்து வரும் இவர்களது மகன் தருண் ஆதித்யா, கடந்த சில நாட்களுக்கு முன்னர் வீட்டில் இருந்து , காணாமல் போனார். இதுகுறித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார், சிறுவனை தேடி வந்தனர்.

இந்நிலையில்10 நாட்களுக்கு பின்னர், கணியாமூர் கிராமத்தில் சிறுவன் தருண் ஆதித்யாவை பத்திரமாக மீட்டனர். மேலும் சிறுவனை கடத்திச் சென்றவர்கள் யார், எதற்காக கடத்திச் சென்றனர் என்பது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.,

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்