தமிழக செய்திகள்

நாகர்கோவில்-கோட்டயம் இடையே சிறப்பு ரெயில் - தெற்கு ரெயில்வே அறிவிப்பு

நாகர்கோவில்-கோட்டயம் இடையே சிறப்பு ரெயில் இயக்கப்பட உள்ளதாக தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.

தினத்தந்தி

சென்னை,

நாகர்கோவில்-கோட்டயம் இடையே வரும் அக்டோபர் 6 ஆம் தேதி முதல் சிறப்பு ரெயில் இயக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது;-

* நாகர்கோவில்-கோட்டயம் (வண்டி எண்: 06366) இடையே தினசரி சிறப்பு ரெயில் வருகிற அக்டோபர் மாதம் 6-ந்தேதி முதல் மதியம் 1 மணிக்கு நாகர்கோவில் ரெயில் நிலையத்தில் இருந்து இயக்கப்படும்.

* கோட்டயம்-நிலாம்பூர் ரோடு (06326) இடையே சிறப்பு ரெயில் வருகிற 7-ந்தேதி முதல் தினசரி அதிகாலை 5.15 மணிக்கு கோட்டயம் ரெயில் நிலையத்தில் இருந்து புறப்படும்.

மறுமார்க்கமாக நிலாம்பூர் ரோடு-கோட்டயம் (06325) இடையே சிறப்பு ரெயில் வருகிற 7-ந்தேதி முதல் தினசரி மதியம் 3.15 மணிக்கு நிலாம்பூர் ரோடு ரெயில் நிலையத்தில் இருந்து இயக்கப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்