தமிழக செய்திகள்

நாமக்கல் : குள்ளங்காடு பகுதியில் 14 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக 11 பேர் கைது

நாமக்கல் மாவட்டம் குள்ளங்காடு பகுதியில் 14 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக 11 பேரை போலீசார் கைது செய்தனர்.

தினத்தந்தி

நாமக்கல்,

நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் அருகில் உள்ள வட்டமலை குள்ளங்காடு பகுதியைச் சேர்ந்த தறித்தொழிலாளியின் 14 வயது மகளை தொடர்ந்து பாலியல் வன்கொடுமை செய்ததாக குமாரபாளையம் பகுதியை சேர்ந்த 12 பேர் மீது நாமக்கல் மாவட்ட குழந்தைகள் நல அலுவலர் ரஞ்சித பிரியா புகார் கொடுத்தார். அந்த புகாரின் அடிப்படையில் திருச்செங்கோடு அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் 11 பேரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கைது செய்யப்பட்ட, குமார், வடிவேல், சுந்தரம், பன்னீர், மூர்த்தி, கோபி, அபி, சங்கர், நாய் சேகர், சரவணன் உள்ளிட்ட 11 பேரும் திருச்செங்கோடு ஊரக காவல் நிலையத்தில் வைத்து போலீசார் விசாரனை நடத்தி வருகின்றனர்.

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு