தமிழக செய்திகள்

நாங்குநேரி ஓடை அருகே ஆதார் உள்ளிட்ட முக்கிய ஆவணங்கள் கிடந்ததால் பரபரப்பு

நாங்குநேரி ஓடை அருகே ஆதார் உள்ளிட்ட முக்கிய ஆவணங்கள் அடங்கிய தபால்கள் விநியோகிக்கப்படாமல் கிடந்ததைக் கண்டு பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர்.

தினத்தந்தி

நெல்லை,

நெல்லை மாவட்டம் நாங்குநேரி அருகே அரியகுளம் கிராமத்தில் உள்ள குளம் நிரம்பியதால், உபரி நீர் கால்வாய் வழியாக வெளியேறுகிறது. இதனால் அங்குள்ள சாலை சேதமடைந்துள்ளது. இதையடுத்து சாலையை சரிசெய்யும் பணியில் கிராம மக்கள் ஈடுபட்டனர். அப்போது அங்குள்ள ஓடையோரத்தில் குவியல் குவியலாக, விநியோகிக்கப்படாத தபால்கள் கிடப்பதைக் கண்டு கிராம மக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

அதில், பொது மக்களுக்கு விநியோகிக்கப்பட வேண்டிய ஆதார் அட்டை, எல்.ஐ.சி, வங்கி, அரசுத்துறை மற்றும் தனிநபர் கடிதங்கள் உட்பட முக்கிய ஆவணங்கள் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து, தண்ணீரில் சேதமடையாமல் கிடந்த ஆதார் அட்டைகளை மீட்ட கிராம மக்கள், இது தொடர்பாக போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். இதுகுறித்து பேலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை