தமிழக செய்திகள்

அஞ்சூர் அருகே கல்லூரி சார்பில் அரசு பள்ளியில் நாட்டு நலப்பணி திட்ட முகாம்

அஞ்சூர் அருகே கல்லூரி சார்பில் அரசு பள்ளியில் நாட்டு நலப்பணி திட்ட முகாம் 3 நாட்களாக நடைபெற்றது.

தினத்தந்தி

காஞ்சீபுரம் மாவட்டம் படப்பை அடுத்த ராசி என்ஜினீயரிங் கல்லூரி சார்பில் 2023-ம் ஆண்டுக்கான நாட்டு நலப்பணி திட்ட முகாம் செங்கல்பட்டு மாவட்டம் அஞ்சூர் கிராமத்தில் உள்ள அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளியில் 3 நாட்களாக நடைபெற்றது. இதில் ராசி என்ஜினீயரிங் கல்லூரியின் மாணவ-மாணவிகள் மற்றும் பேராசிரியர்கள், அஞ்சூர் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் அனைவரும் கலந்துகொண்டு பள்ளி வளாகம் சுத்தப்படுத்தல், கட்டிடம் சரிசெய்தல் வர்ணம் பூசுதல், தளம் சிமெண்டு பூசுதல் போன்ற பணிகளை சிறப்பாக செய்தனர். மேலும் மாணவர்களுக்கு கண் சிகிச்சை முகாமும் நடைபெற்றது. விழாவில் ராசி கல்லூரியின் தலைவர் டாக்டர் ரேணுகாதேவி, கல்லூரியின் இயக்குனர் டாக்டர் ரெங்கநாதன், கல்லூரியின் முதல்வர் டாக்டர் ரெங்கநாதமுத்து, கல்லூரியின் நாட்டுநலப்பணித்திட்ட அலுவலர் டாக்டர் வீரப்பன், துணைமுதல்வர் டாக்டர் ரவிக்குமார் மற்றும் பேராசியர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர் முடிவில் பள்ளி தலைமை ஆசிரியர் நன்றி கூறினார்.

ஈரானை தாக்கும் அளவுக்கு அமெரிக்காவிடம் வலிமை இல்லை; அதனாலேயே... மத்திய கிழக்கு நிபுணர் பேட்டி

மராட்டியம் அர்ப்பணிப்புள்ள ஒரு தலைவரை இழந்து விட்டது: அஜித் பவார் மறைவுக்கு தெண்டுல்கர் இரங்கல்

தமிழகம் உள்பட 5 மாநில சட்டசபை தேர்தல்: 4ம் தேதி தேர்தல் ஆணையம் ஆலோசனை

நாடாளுமன்றத்தில் ஜனாதிபதி ஆற்றிய உரை வளர்ச்சிக்கான பார்வை கொண்டது: துணை ஜனாதிபதி

அஜித் பவார் மரணம்; சரத் பவாரை தொடர்பு கொண்டு இரங்கல் தெரிவித்த பிரதமர் மோடி