சென்னை,
மேற்காசிய பகுதியில் ஈரான், இஸ்ரேல் மற்றும் அமெரிக்க கூட்டுப் படைகளிடையே நிலவி வந்த தீவிர போர் பதற்றம் காரணமாக, கடந்த மார்ச் மாதம் அந்த பகுதியில் ஏற்பட்ட திடீர் எண்ணெய் விநியோக தட்டுப்பாடு மற்றும் கடல்சார் போக்குவரத்து பாதை பாதிப்புகளால், உலகளவில் கச்சா எண்ணெய் விலை கணிசமாக உயர்ந்தது. இதனால் ஏற்பட்ட இழப்பை சமாளிக்க, நயாரா நிறுவனம் கடந்த மார்ச் மாத இறுதியில் பெட்ரோல் விலையை லிட்டருக்கு ரூ. 5-மும், டீசல் விலையை ரூ. 3-மும் உயர்த்தியிருந்தது.
வளைகுடா பகுதியில் நிலவிய போர் பதற்றம் தணிந்ததை தொடர்ந்து, கடல்சார் போக்குவரத்து மற்றும் கச்சா எண்ணெய் விநியோகம் முற்றிலும் சீரடைந்துள்ளது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை வீழ்ச்சியடைந்துள்ளதை தொடர்ந்து, நயாரா நிறுவனம் இந்த விலை குறைப்பு நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.
பெட்ரோல்: லிட்டருக்கு ரூ. 5 குறைக்கப்பட்டுள்ளது.டீசல்: லிட்டருக்கு ரூ. 3 குறைக்கப்பட்டுள்ளது.இந்த புதிய விலை குறைப்பு, நாடு முழுவதும் உள்ள நயாரா நிறுவனத்தின் 7,000-க்கும் மேற்பட்ட பெட்ரோல் பங்க்-களில் உடனடியாக நடைமுறைக்கு வந்துள்ளது.
அரசு பொதுத்துறை நிறுவனங்களின் தற்போதைய நிலைதனியார் நிறுவனமான நயாரா, சர்வதேச சந்தை நிலவரத்திற்கு ஏற்ப விலையை உடனடியாக மாற்றியமைக்கிறது. ஆனால், நாட்டின் முன்னணி அரசு பொதுத்துறை நிறுவனங்களான இந்தியன் ஆயில் பாரத் பெட்ரோலியம் மற்றும் ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் ஆகியவை தங்களது பெட்ரோல், டீசல் சில்லறை விற்பனை விலையில் தற்போதைக்கு எந்த மாற்றமும் செய்யவில்லை.
இதனால், இந்த உடனடி விலை குறைப்பின் பலனை நயாரா பங்க்-களுக்கு செல்லும் வாகன ஓட்டிகள் மட்டுமே பெற முடியும். உள்ளூர் மாநில வரிகள் காரணமாக ஒவ்வொரு நகரத்திலும் விலையில் சிறிய மாறுபாடுகள் இருக்கலாம்.