சென்னை,
தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தனது எக்ஸ் தள பதிவில் கூறி இருப்பதாவது:-
நடந்து முடிந்த 2026 தமிழக சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று, தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் மற்றும் தமிழக முதல்-அமைச்சராக பொறுப்பேற்றுள்ள C. ஜோசப் விஜய் அவர்களின் பதவியேற்பு விழாவில் கலந்து கொண்டு, எனது மனமார்ந்த வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொண்டேன்.
தமிழக மக்களின் நலனையும் மாநிலத்தின் முன்னேற்றத்தையும் முதன்மையாகக் கொண்டு, வரும் ஐந்து ஆண்டு கால ஆட்சியில் பல்வேறு மக்கள் நலத் திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தி, ஜனநாயகப் பொறுப்புணர்வுடனும் மக்கள் நலக் கடமையுடனும் சிறந்த ஆட்சியை வழங்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.