தமிழக செய்திகள்

ஆத்தூர் அருகே போலீஸ் சப்-இன்ஸ்பெக்டரை மிரட்டிய வாலிபர் கைது

ஆத்தூர் அருகே போலீஸ் சப்-இன்ஸ்பெக்டரை மிரட்டிய வாலிபர் கைது செய்யப்பட்டார்.

தினத்தந்தி

ஆறுமுகநேரி:

ஆத்தூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சிவராஜா மற்றும் போலீசார் சம்பவத்தன்று ஆத்தூரில் இருந்து சேர்ந்த பூ மங்களம் செல்லும் சாலையில் தனியார் ஆலை அருகே வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது அந்த வழியாக வந்த வாலிபர் ஒருவரை நிறுத்தி விசாரித்த போது, முன்னுக்குப்பின் முரணாக பதில் கூறியுள்ளார். தொடர் விசாரணையில் ஈடுபட்ட சப்-இன்ஸ்பெக்டரை ஆபாசமாக பேசியதுடன் மிரட்டல் விடுத்துள்ளார். ஆனாலும், போலீசார் அவரை மடக்கிப்பிடித்து சோதனை செய்தனர். அவரிடம் இருந்து 5 கிராம் கஞ்சா பொட்டலத்தை போலீசார் பறிமுதல் செய்தனர். அவர், தலைவன்வடலியை சேர்ந்த சிவபெருமாள் மகன் சிவராம்குமார் (வயது 24) என்பது தெரிய வந்தது. இது தொடர்பாக ஆத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர்

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து