தமிழக செய்திகள்

கடமலைக்குண்டு அருகேகிணற்றில் தவறி விழுந்த புள்ளி மான் மீட்பு

கடமலைக்குண்டு அருகே கிணற்றில் தவறி விழுந்த புள்ளிமான் மீட்கப்பட்டது.

தினத்தந்தி

கடமலைக்குண்டு அருகே பாலூத்து கிராமத்தை ஒட்டியுள்ள வனப்பகுதியில் புள்ளி மான்கள் அதிக அளவில் உள்ளன. நேற்று அதிகாலை வனப்பகுதியில் இருந்து தண்ணீர் தேடி சுமார் 1 வயதுடைய மான் ஒன்று வந்தது. அப்போது அங்கிருந்த 50 அடி ஆழ தனியார் தோட்ட கிணற்றுக்குள் மான் தவறி விழுந்தது. கிணற்றில் 20 அடி வரை தண்ணீர் இருந்ததால் மான் தத்தளித்து கொண்டிருந்தது. அப்போது அந்த வழியாக சென்ற பொதுமக்கள் கிணற்றில் மான் தத்தளிப்பதை பார்த்தனர்.

இது தொடர்பாக அவர்கள் கண்டமனூர் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வனத்துறையினர், கடமலைக்குண்டு தீயணைப்பு வீரர்கள் மூலம் கிணற்றில் விழுந்த மானை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். சுமார் 2 மணி நேர போராட்டத்திற்கு பின்பு கயிறு மூலம் புள்ளிமான் மீட்கப்பட்டது. இதைத்தொடர்ந்து மானுக்கு கால்நடை டாக்டர்கள் மூலம் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு வனப்பகுதிக்குள் விடப்பட்டது.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து