தமிழக செய்திகள்

கோபி அருகே டிரைவர் தூக்குப்போட்டு தற்கொலை

கோபி அருகே டிரைவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டா

கோபி அருகே உள்ள வடுகபாளையம் புதூரை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன் (வயது 37) சரக்கு ஆட்டோ டிரைவர். இவருடைய மனைவி மாலதி. இவர்களுக்கு 4 வயதில் ஒரு மகன் உள்ளான். பாலகிருஷ்ணனுக்கு குடிப்பழக்கம் இருந்து வந்தாக தெரிகிறது. இந்தநிலையில் நேற்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் குடிபோதையில் வீட்டின் விட்டத்தில் சேலையால் தூக்குப்போட்டுக்கொண்டார். இதைப்பார்த்த அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக கோபி அரசு ஆஸ்பத்திரிக்கு ஆம்புலன்சில் கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே அவர் இறந்துவிட்டார். இதுகுறித்து கோபி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

கடந்த ஆண்டில் 18 ஆயிரம் முகாம்கள் மூலம் 2.22 கோடி பேருக்கு வேலை - மத்திய அரசு தகவல்

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...