தமிழக செய்திகள்

முள்ளக்காடு அருகே வாலிபருக்கு அரிவாள்வெட்டு

முள்ளக்காடு அருகே வாலிபருக்கு அரிவாள்வெட்டு விழுந்தது.

தினத்தந்தி

ஸ்பிக் நகர்:

தூத்துக்குடி அருகே உள்ள முள்ளக்காடு நேசமணி நகரை சேர்ந்த செந்தில்வேல் மகன் பிரேம்குமார் (வயது 19). கடந்த சில நாட்களுக்கு முன்பு இவரது பெரியம்மா முருகேஸ்வரியின் மகன் மாரி செல்வம் என்பவரை ராஜீவ் நகர் 7-வது தெருவை சேர்ந்த மாரிமுத்து மகன் முகேஷ் (20), சாமி நகரை சேர்ந்த இசக்கி பாண்டி ஆகிய இருவரும் அவதூறாக பேசி தாக்கியுள்ளனர். அப்போது அங்கு வந்த பிரேம்குமாரின் தாயார், முகேஷையும் இசக்கி பாண்டியையும் கண்டித்து அனுப்பி உள்ளார். இந்த நிலையில் சம்பவத்தன்று தேவி நகர் பகுதியில் உள்ள விளையாட்டு மைதானம் அருகே வந்து கொண்டிருந்த பிரேம்குமாரை முகேஷ், இசக்கி பாண்டியும் வழிமறித்து கம்பால் தாக்கியும், அரிவாளால் வெட்டியுள்ளனர். அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடிவருவதை பார்த்த 2 பேரும்தப்பி ஓடிவிட்டனர். இதில் காயம் அடைந்த பிரேம் குமார் தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றார். இதுகுறித்த புகாரின் பேரில் முத்தையாபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து முகேஷை கைது செய்தனர்.

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்