தமிழக செய்திகள்

நாசரேத் அருகே ஆலய பிரதிஷ்டை விழா

நாசரேத் அருகே ஆலய பிரதிஷ்டை விழா நடந்தது.

தினத்தந்தி

நாசரேத்:

நாசரேத் அருகே உள்ள கடையனோடை சேகரம் தங்கையாபுரம் தூய பேதுருவின் ஆலய 109-வது பிரதிஷ்டை விழா 5 நாட்கள் நடைபெற்றது. முதல் 3 நாட்கள் மாலையில் ஊரைச் சுற்றி ஜெப பவனியும், பின்னர் ஸ்தோத்திர ஆராதனையும், அதனை தொடர்ந்து கன்வென்ஷன் கூட்டங்களும் நடந்தது. நாசரேத் காபிரியேல் நற்செய்தி குழுவினர் பாடல்கள் பாடினர். சென்னை இயேசுவே ஆதாரம் ஊழியங்களின் நிறுவனர் டேனியல் தேவ செய்தி வழங்கினார். 4-வது நாள் மாலையில் பரிசுத்த ஞானஸ்நான ஆராதனை நடந்தது. ஸ்பிக் நகர் சேகர குரு ரூபன் தனசிங் அருட்செய்தி வழங்கினார். அன்று இரவு 109-வது பிரதிஷ்டை பண்டிகை ஆராதனை மற்றும் திருவிருந்து ஆராதனை நடந்தது. சீயோன் நகர் சேகரகுரு ரவி சிறப்பு செய்தி வழங்கினார். 5-வது நாள் மதியம் அசன விருந்து நிகழ்ச்சி நடந்தது. இதற்கான ஏற்பாடுகளை சேகர குரு ஆசீர் சாமுவேல், சபை ஊழியர் செல்வின் ஞானக்கண், திருமண்டல பெருமன்ற உறுப்பினர் செல்லப்பா மற்றும் தங்கையாபுரம் சபையார், விழா குழுவினர் செய்திருந்தனர்.

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்