தமிழக செய்திகள்

உத்தமபாளையம் அருகேமோட்டார்சைக்கிள் மோதி முதியவர் சாவு

உத்தமபாளையம் அருகே மோட்டார்சைக்கிள் மோதி முதியவர் பலியானார்.

தினத்தந்தி

உத்தமபாளையம் அருகே உள்ள ஆணைமலையன்பட்டி சர்ச் தெருவை சேர்ந்தவர் சாமிமுத்து (வயது 78). இவர், பழைய பொருட்களை தள்ளு வண்டியில் வாங்கி அதனை விற்பனை செய்து வந்தார். நேற்று முன்தினம், சாமிமுத்து தள்ளு வண்டியை தள்ளிக்கொண்டு, கோகிலாபுரம்-வெள்ளைக்கரடு சாலையில் தனியார் பள்ளி அருகே சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த மோட்டார்சைக்கிள் அவர் மீது மோதியது. இதில் படுகாயமடைந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக உத்தமபாளையம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து ராயப்பன்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்