தமிழக செய்திகள்

நெல்லை மாவட்ட அமமுகவினர் 100-க்கும் மேற்பட்டோர் அதிமுகவில் இணைந்தனர்

நெல்லை மாவட்டத்தை சேர்ந்த அமமுகவினர் 100-க்கும் மேற்பட்டோர் அக்கட்சியில் இருந்து விலகி முதலமைச்சர் முன்னிலையில் அதிமுகவில் இணைந்தனர்.

சென்னை,

நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் படுதோல்வியை சந்தித்ததை தொடர்ந்து அக்கட்சியிலிருந்து பலர் விலகி அதிமுகவில் இணைந்து வருகின்றனர்.

இந்நிலையில், நெல்லை மாவட்டத்தை சேர்ந்த அமமுக நிர்வாகிகள் 100-க்கும் மேற்பட்டோர், சென்னையில் முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்தனர்.

SCROLL FOR NEXT