தமிழக செய்திகள்

நெல்லை-திருச்செந்தூர் ரெயில் பாதை பராமரிப்பு பணி 4-ந்தேதி நிறைவு பெறும் - தெற்கு ரெயில்வே தகவல்

நெல்லை-திருச்செந்தூர் இடையிலான வழித்தடத்தில் 6-ந்தேதி முதல் ரெயில்கள் இயக்கப்படும் என தெற்கு ரெயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.

நெல்லை,

நெல்லை, தூத்துக்குடி உள்ளிட்ட தென் மாவட்டங்களில் கடந்த 17 மற்றும் 18 ஆகிய தேதிகளில் பெய்த கனமழையின் காரணமாக நெல்லை-திருச்செந்தூர் இடையிலான ரெயில் பாதை பல இடங்களில் சேதமடைந்தது. இதன் காரணமாக 17-ந்தேதி முதல் இந்த வழித்தடத்தில் ரெயில்களின் இயக்கம் தடை செய்யப்பட்டு பராமரிப்பு பணிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

அதிநவீன உபகரணங்களைக் கொண்டு பொறியாளர்கள் மற்றும் ரெயில்வே ஊழியர்கள் இரவு பகலாக பராமரிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த பணிகள் அனைத்தும் 4-ந்தேதி மாலைக்குள் நிறைவு பெறும் எனவும், அதன் பின்னர் தண்டவாளத்தில் இன்ஜின்களை இயக்கி சோதனை செய்து 6-ந்தேதி முதல் நெல்லை-திருச்செந்தூர் இடையிலான பாதையில் ரெயில்கள் இயக்கப்படும் என தெற்கு ரெயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்