தமிழக செய்திகள்

நெல்லை வந்தே பாரத்: திண்டுக்கல், மதுரைக்கு 10 நிமிடம் முன்னதாகச் செல்லும்

சென்னை எழும்பூ - திருநெல்வேலி இடையே வந்தே பாரத் ரயில் 8 மணி நேரத்துக்குள் செல்லும் வகையில் இயக்கப்படுகிறது.

தினத்தந்தி

சென்னை, 

சென்னை எழும்பூ - திருநெல்வேலி இடையே வந்தே பாரத் ரயில் 8 மணி நேரத்துக்குள் செல்லும் வகையில் இயக்கப்படுகிறது. இந்த நிலையில், திண்டுக்கல், மதுரை, விருதுநகா ரயில் நிலையங்களுக்கு 10 நிமிஷங்கள் முன்னதாக செல்லும் வகையில் ரயிலின் வேகம் அதிகரிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, சென்னை எழும்பூரில் இருந்து பிற்பகல் 2.50 மணிக்கு புறப்படும் ரயில் திண்டுக்கலுக்கு இரவு 7.56 மணிக்கு பதிலாக இரவு 7.46 மணிக்கும், மதுரைக்கு இரவு 8.40 மணிக்கு பதிலாக இரவு 8.30 மணிக்கும், விருதுநகருக்கு 9.13 மணிக்கு பதிலாக 9.03 மணிக்கும் செல்லும். மற்ற ரயில்நிலையங்களான தாம்பரம், விழுப்புரம், திருச்சி, திருநெல்வேலிக்கு வழக்கமான நேரத்தில் சென்றடையும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய கால அட்டவணை டிசம்பர் 1-ந்தேதி முதல் நடைமுறைக்கு வந்தது.

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு