தமிழக செய்திகள்

நெரூர் சதாசிவ பிரமேந்திராள் ஆராதனை

நெரூர் சதாசிவ பிரமேந்திராள் ஆராதனை நடந்தது.

நெரூர் சதாசிவ பிரமேந்திராள் 109-ம் ஆண்டு ஆராதனை விழா கடந்த 25-ந்தேதி தொடங்கியது. இதனையொட்டி தினமும் உஞ்ச விருத்தி, கிராம பிரதட்சினம், லட்சார்ச்சனை, வேதபாராயணம் ஆகிய நிகழ்ச்சிகள் நடந்தன. இதனைத்தொடர்ந்து நேற்று ஆராதனை விழாவையொட்டி சதாசிவ பிரமேந்திரநாள் சரஸ்வதி சுவாமிகளின் ஆராதனை உற்சவமும், லட்சார்ச்சனை, தெய்வீக பேரூரைகள், திவ்யநாம சங்கீர்த்தனை, பஜனை ஆகியவைகள் நடந்தன. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

SCROLL FOR NEXT