தமிழக செய்திகள்

சென்னை, திருச்சிக்கு புதிய பஸ்கள்

மன்னார்குடியில் இருந்து சென்னை, திருச்சிக்கு புதிய பஸ்களை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா தொடங்கி வைத்தார்.

தினத்தந்தி

மன்னார்குடி:

மன்னார்குடியில் ரூ.46 கோடி செலவில் நவீன புதிய பஸ் நிலையம் கட்டுமான பணிகள் நடைபெற்று வருகிறது. இதனால் தேரடி பகுதியில் தற்காலிக பஸ் நிலையம் செயல்பட்டு வருகிறது. தற்காலிக பஸ் நிலையத்தில் நேற்று அரசு போக்குவரத்து கழகம் மன்னார்குடி கிளை சார்பில் மன்னார்குடியில் இருந்து திருச்சிக்கு 2 பஸ்களும், மன்னார்குடியில் இருந்து காஞ்சிபுரம், ஈரோடு, சென்னை ஆகிய வழித்தடங்களில் 3 பஸ்களும் என 5 புதிய பஸ்கள் தொடங்கி வைக்கும் நிகழ்ச்சி மன்னார்குடி தற்காலிக பஸ் நிலையத்தில் நடைபெற்றது. புதிய பஸ்களை தொழில் துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா கொடியசைத்து தொடங்கி வைத்து பஸ்சில் பயணம் செய்தார். இதில் தமிழக அரசு போக்குவரத்து கழக நாகை மண்டல பொது மேலாளர் இளங்கோவன், கிளை மேலாளர் மதன்ராஜ், மன்னார்குடி உதவி கலெக்டர் கீர்த்தனா மணி, நகர் மன்ற தலைவர் மன்னை சோழராஜன், தி.மு.க. நகர செயலாளர் வீரா கணேசன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்