தமிழக செய்திகள்

"வரும் ஆண்டுகளில் புதிய கல்லூரிகள் தொடங்கப்படும்" - அமைச்சர் பொன்முடி பேச்சு

வரும் ஆண்டுகளில் புதிய கல்லூரிகள் தொடங்கப்படும் என்று அமைச்சர் பொன்முடி கூறினார்.

சென்னை,

சட்டசபையில் நேற்றைய கேள்வி நேரத்தின்போது உத்திரமேரூர் தொகுதி எம்.எல்.ஏ. சுந்தர், வாலாஜாபாத் அருகே கலைக்கல்லூரி தொடங்க அரசு ஆவண செய்யுமா? என்று கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதிலளித்து அமைச்சர் பொன்முடி கூறியதாவது:-

உத்திரமேரூர் தொகுதியில் ஏற்கனவே கலைக் கல்லூரி உள்ளது. முதல்-அமைச்சர் எந்த தொகுதியில் கல்லூரி இல்லையோ அந்த தொகுதிகளுக்கு முன்னுரிமை கொடுத்து கல்லூரிகளை தொடங்க வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளார்.

அதன்படி 1 ஆண்டுகளில் 31 புதிய அரசு கலைக் கல்லூரிகள் தொடங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளன. உத்திரமேரூர் தொகுதியில் மூன்று கல்லூரிகள் செயல்பட்டு வருகிறது.

அதே நேரத்தில் கல்லூரிகளில் கூடுதல் பாடப் பிரிவுகள் தொடங்கவும் தேவையான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 4 ஆயிரம் பேராசிரியர்களுக்கு நிரந்தரப்பணி வழங்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு