தமிழக செய்திகள்

தூத்துக்குடி விமான நிலையத்தின் புதிய இயக்குனர் பொறுப்பேற்பு

புதிதாக பொறுப்பேற்ற இயக்குனர் அனூப், கடந்த 2008-ம் ஆண்டு இந்திய விமான ஆணையத்தில் பணியில் சேர்ந்தார்.

தினத்தந்தி

தூத்துக்குடி விமான நிலைய இயக்குனராக பணியாற்றி வந்த ராஜேஷ் பணி இடமாற்றம் செய்யப்பட்டார். இதனை தொடர்ந்து மைசூரு விமான நிலைய இயக்குனராக பணியாற்றி வந்த ஜே.ஆர்.அனூப், தூத்துக்குடி விமான நிலைய இயக்குனராக நியமிக்கப்பட்டுள்ளார். அவர் தற்போது தூத்துக்குடி விமான நிலையத்துக்கு வந்து பொறுப்பேற்றுக் கொண்டார். அவரை விமான நிலைய ஊழியர்கள், அதிகாரிகள் வரவேற்றனர்.

புதிதாக பொறுப்பேற்ற இயக்குனர் அனூப், கடந்த 2008-ம் ஆண்டு இந்திய விமான ஆணையத்தில் பணியில் சேர்ந்தார். தொடர்ந்து கோவா, கோழிக்கோடு, ஜம்மு-காஷ்மீர், திருவனந்தபுரம் ஆகிய விமான நிலையங்களில் இயக்க பிரிவுகளிலும், புதுடெல்லி இந்திய விமான ஆணைய தலைமை அலுவலகத்திலும் பணியாற்றி உள்ளார்.

அதன்பிறகு மைசூர் விமான நிலைய இயக்குனராக பணியாற்றிய நிலையில் தற்போது தூத்துக்குடி விமான நிலைய இயக்குனராக பொறுப்பேற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்