தமிழக செய்திகள்

பயணிகளின் கூட்டநெரிசலை குறைக்க கடற்கரை-செங்கல்பட்டு இடையே புதிய மின்சார ரெயில்

பயணிகளின் கூட்டநெரிசலை குறைக்க கடற்கரை - செங்கல்பட்டு இடையே புதிய மின்சார ரெயில் இன்று முதல் இயக்கப்பட உள்ளது.

தினத்தந்தி

தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

பயணிகளின் கூட்டநெரிசலை குறைக்க இன்று(செவ்வாய்க்கிழமை) முதல் கடற்கரை - செங்கல்பட்டு இடையே புதிதாக ஒரு மின்சார ரெயில் இயக்கப்பட உள்ளது. மாலை 6.14 மணிக்கு சென்னை கடற்கரையில் இருந்து புறப்படும் இந்த மின்சார ரெயில் இரவு 8 மணிக்கு செங்கல்பட்டு சென்றடையும்.

இதேபோல மறுமார்க்கமாக இரவு 8.45 மணிக்கு செங்கல்பட்டில் இருந்து புறப்படும் மின்சார ரெயில் இரவு 10.40 மணிக்கு கடற்கரையை வந்தடையும். இந்த ரெயில் திங்கட்கிழமை முதல் சனிக்கிழமை வரை மட்டும் இயங்கும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து