தமிழக செய்திகள்

புதிய செயல் அலுவலர் பொறுப்பேற்பு

அரங்கநாதர் கோவில் புதிய செயல் அலுவலர் பொறுப்பேற்பு

தினத்தந்தி

ரிஷிவந்தியம்

ரிஷிவந்தியம் ஒன்றியத்துக்குட்பட்ட ஆதிதிருவரங்கத்தில் பழமை வாய்ந்த ரங்கநாயகி தாயார் சமேத அரங்கநாத பெருமாள் கோவில் உள்ளது. அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இக்கோவில் கீழையூர் வீரட்டனேஸ்வரர் கோவில் கட்டுப்பாட்டில் உள்ள குழுக்கோவில்களில் இருந்து வந்தது. இந்த நிலையில் அரங்கநாத பெருமாள் கோவிலுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை மற்றும் உண்டியல் காணிக்கை தொகையும் அதிகரித்தது. கோவில் வருமானத்தை கருத்தில் கொண்டு அரங்கநாத பெருமாள் கோவில் தரம் உயர்த்தப்பட்டு, இக்கோவிலுக்கென புதிய செயல் அலுவலர்(நிலை-3) பதவி இடம் ஏற்படுத்தப்பட்டது. இதைத் தொடர்ந்து புதிய செயல் அலுவலராக நியமனம் செய்யப்பட்ட பாக்கியராஜ் கோவிலில் பொறுப்பேற்றுக்கொண்டார்.

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்