தமிழக செய்திகள்

செங்கமலநாச்சியார்புரம் பஞ்சாயத்திற்கு புதிய தலைவர் பொறுப்பேற்பு

செங்கமலநாச்சியார்புரம் பஞ்சாயத்திற்கு புதிய தலைவர் பொறுப்பு ஏற்றுக்கொண்டார்.

தினத்தந்தி

சிவகாசி, 

சிவகாசி ஒன்றியத்துக்கு உட்பட்ட செங்கமலநாச்சியார்புரம் பஞ்சாயத்து தலைவராக இருந்த கருப்பசாமி விபத்தில் பரிதாபமாக இறந்தார். அதனை தொடர்ந்து அந்த பஞ்சாயத்தில் துணைத்தலைவராக பணியாற்றி வந்த மாரியப்பன் பொறுப்பு தலைவராக பணியாற்ற மாவட்ட நிர்வாகம் அனுமதி வழங்கியது. இதனை தொடர்ந்து நேற்று மதியம் செங்கமலநாச்சியார்புரம் பஞ்சாயத்து அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் முறைப்படி மாரியப்பன் பஞ்சாயத்து தலைவராக பொறுப்பு ஏற்றுக் கொண்டார். இந்த நிகழ்ச்சியில் வட்டார வளர்ச்சி அலுவலர் புகழேந்தி, மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் சபரிகுமார், உதவியாளர் தர்மர், ஊராட்சி செயலாளர் கனகமுத்து, ஒன்றிய கவுன்சிலர்கள், செங்கமல நாச்சியார்புரம் பஞ்சாயத்து வார்டு உறுப்பினர்கள், பொதுமக்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து