தமிழக செய்திகள்

புதிய ஸ்மார்ட் பஸ்நிலைய கட்டுமான பணிகள்

அருப்புக்கோட்டையில் புதிய ஸ்மார்ட் பஸ்நிலையம் கட்டும் பணிகளை நகராட்சி நிர்வாக இயக்குனர் சிவராசு ஆய்வு செய்தார்.

தினத்தந்தி

அருப்புக்கோட்டை புதிய பஸ் நிலையம் முழுவதும் இடிக்கப்பட்டு அங்கு ரூ.8 கோடி மதிப்பில் புதிதாக ஸ்மார்ட் பஸ் நிலையம் கட்டும் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த புதிய பஸ் நிலையத்தில் 64 கடைகள், உணவகம், பாலூட்டும் அறை, பாதுகாவலர் அறை, டிக்கெட் கவுண்ட்டர், கழிப்பறை வசதிகள் என பல்வேறு வசதிகளுடன் நவீன முறையில் கட்டப்பட்டு வருகிறது.

அதன் கட்டுமான பணிகள் தற்போது தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்தநிலையில் புதிய பஸ் நிலையத்தின் கட்டுமான பணிகளை நகராட்சி நிர்வாக இயக்குனர் சிவராசு, மண்டல நிர்வாக பொறியாளர் இளங்கோவன், மண்டல நிர்வாக இயக்குனர் விஜயலட்சுமி உள்ளிட்ட அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்தனர்.

அப்போது கட்டுமான பணிகள் குறித்தும் கடைகள் எப்படி அமைய உள்ளன என்பது குறித்தும் அதிகாரிகளிடம் அவர் கேட்டறிந்தார்.

ஆய்வின்போது ஆணையாளர் அசோக்குமார், பொறியாளர் முகமது சாகுல் ஹமீது மற்றும் அருப்புக்கோட்டை நகராட்சி அதிகாரிகள் உடனிருந்தனர். 

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து