தமிழக செய்திகள்

கன்னியாகுமரி மாவட்டத்திற்கு புதிய போலீஸ் சூப்பிரண்டு - தமிழக அரசு உத்தரவு

கன்னியாகுமரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு இதற்கு முன்பு டாக்டர் ஆர்.ஸ்டாலின் இருந்தார்.

சென்னை,

கன்னியாகுமரி மாவட்டத்திற்கு புதிய போலீஸ் சூப்பிரண்டை நியமனம் செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

தமிழக அரசின் கூடுதல் தலைமை செயலாளர் கே.மணிவாசன் வெளியிடட்டுள்ள உத்தரவில் கூறப்பட்டுள்ளதாவது:-

திருநெல்வேலி நகர (மேற்கு) துணை போலீஸ் கமிஷனர் அன்சுல் நாகர், கன்னியாகுமரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டாக நியமிக்கப்படுகிறார். அந்த இடத்தில் இதற்கு முன்பு டாக்டர் ஆர்.ஸ்டாலின் இருந்தார்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT