தமிழக செய்திகள்

புதிதாக உருவாக்கப்பட்டுள்ள ஊட்டி மலை ரெயில் எஞ்சின் - உலை ஆயிலுக்கு பதில் அதிவேக டீசல் பயன்பாடு

அதிவேக டீசலை பயன்படுத்தும் வகையில் திருச்சி பொன்மலை ரெயில்வே பணிமனையில் புதிய ரெயில் எஞ்சின் உருவாக்கப்பட்டுள்ளது.

தினத்தந்தி

திருச்சி,

ஊட்டி மலை ரெயில் எஞ்சிகள் நிலக்கரி மூலம் இயக்கப்பட்டாலும், அவற்றை ஆன் செய்வதற்கு உலை ஆயில் பயன்படுத்தப்பட்டு வந்தது. இதனால் அந்த எஞ்சினை ஆன் செய்யும் போது அதிக அளவில் புகை வெளியேறி மாசு ஏற்படுத்தியது.

இதனால் உலை ஆயிலுக்கு பதிலாக அதிவேக டீசலை பயன்படுத்தும் வகையில் திருச்சி பொன்மலை ரெயில்வே பணிமனையில் புதிய ரெயில் எஞ்சின் உருவாக்கப்பட்டுள்ளது. சுமார் 9 கோடியே 30 லட்சம் ரூபாய் செலவில் புதிய தொழில்நுட்பத்துடன் தயாராகியுள்ள இந்த எஞ்சினை 70 பொறியாளர்கள் கடந்த 7 மாதங்களாக உருவாக்கியுள்ளனர்.

இதற்கான பணிகள் முடிவடைந்த நிலையில், திருச்சி பொன்மலையில் ரெயில்வே பணிமனையில் இருந்து அந்த எஞ்சின் லாரி மூலம் ஊட்டிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.  

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து