கோப்புப்படம் 
தமிழக செய்திகள்

பேரறிவாளன் விடுதலை: அமைச்சரவையின் முடிவுகளுக்குக் கட்டுப்பட்டவரே கவர்னர்! - திருமாவளவன்

பேரறிவாளனுக்கு மீள்வாழ்வளிக்க தமிழ்நாடு அரசு முன்வர வேண்டும் என்று விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

தினத்தந்தி

சென்னை, 

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் 30 ஆண்டுகளுக்கு மேல் சிறையில் இருந்த பேரறிவாளனை விடுதலை செய்து சுப்ரீம்கோர்ட்டு இன்று அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது. இதன்படி பேரறிவாளனை சுப்ரீம்கோர்ட் நீதிபதி நாகேஸ்வர ராவ் தலைமையிலான அமர்வு சட்டப்பிரிவு 142-ஐ பயன்படுத்தி விடுதலை செய்து இன்று உத்தரவிட்டது. 

சுப்ரீம்கோர்ட்டின் இந்த தீர்ப்புக்கு பல்வேறு அரசியல் தலைவர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர். இந்நிலையில் பேரறிவாளனுக்கு மீள்வாழ்வளிக்க தமிழ்நாடு அரசு முன்வர வேண்டும் என்று விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். 

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "பேரறிவாளன்  விடுதலை: அமைச்சரவையின் முடிவுகளுக்குக் கட்டுப்பட்டவரே கவர்னர்! 

இந்திய அரசுக்கும் மாநில அரசுக்குமிடையிலான அதிகாரச் சிக்கலுக்குத் தீர்வினைத் தந்த தீர்ப்பு! பேரறிவாளனுக்கு மீள்வாழ்வளிக்க தமிழக அரசு முன்வரவேண்டும்!" என்று திருமாவளவன் தெரிவித்துள்ளார். 

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்