நீலகிரி,
நீலகிரி மாவட்டம் முழுவதும் கடந்த சில ஆண்டுகளாக வனவிலங்குகள் தொல்லை அதிகரித்து வருகிறது. வனப்பகுதியில் தீவன பற்றாக்குறை, குறைந்த எல்லைக்குள் அதிக வனவிலங்குகள் உள்பட பல்வேறு காரணங்களால் வனவிலங்குகள் ஊருக்குள் புகுந்து வருகின்றன.
இந்நிலையில், குன்னூர் அருகே கரோலினா பகுதியில் நேற்று இரவு கறுஞ்சிறுத்தை உலா வந்தது. இரை தேடி குடியிருப்பு பகுதிகளில் கருஞ்சிறுத்தை சுற்றித்திரிவதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.