தமிழக செய்திகள்

கைலாசாவில் இருந்து மதுரை சித்திரை திருவிழா பக்தர்களுக்கு ஆசி வழங்கிய நித்யானந்தா

மதுரை சித்திரை திருவிழா பக்தர்களுக்கு இணையதளம் வழியாக சாமியார் நித்யானந்தா ஆசி வழங்கினார்.

தினத்தந்தி

மதுரை,

உலகப்புகழ் பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சித்திரை திருவிழா கடந்த 5-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

அன்றைய தினத்தில் இருந்து மீனாட்சி அம்மன், சுந்தரேசுவரர் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி மாசி வீதிகளில் வலம் வருகிறார்கள். 2 ஆண்டுகளுக்கு பிறகு சித்திரை திருவிழாவில் சுவாமி வீதி உலா வருவதை காண பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது.

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலின் கிழக்கு கோபுரம் அருகே சாமியார் நித்யானந்தாவின் சியாமளா பீட ஆசிரமம் இயங்கி வருகிறது. இந்த ஆசிரமம் வழியாக சுவாமி-அம்மன் வீதி உலா நடைபெறும்போது அங்குள்ள நித்யானந்தாவின் சீடர்கள் தேங்காய் உடைத்து, தீபாராதனை காண்பித்து வழிபாடு செய்கின்றனர்.

நேரடி ஒளிபரப்பு

மேலும் இந்த சித்திரை திருவிழா நிகழ்ச்சிகளை படம் பிடித்து, அவருடைய சீடர்கள் நித்யானந்தாவுக்கு அனுப்பி வைத்து வருகின்றனர். நேரலை வாயிலாகவும் கைலாசா நாட்டில் இருந்தபடி நிகழ்ச்சிகளை அவர் பார்த்து வருவதாக கூறப்படுகிறது.

மேலும் நித்யானந்தா, சித்திரை திருவிழாவுக்கு வரும் பக்தர்களுக்கு அங்கிருந்தே ஆன்லைன் மூலம் ஆசி வழங்கி பேசி வருகிறார். அப்போது அவர் கைலாசா நாட்டில் இருந்து பேசுவதாக கூறினார். இந்த நிகழ்வுகள் அவரது ஆசிரம வளாகத்தில் வைத்துள்ள திரைகளில் ஒளிபரப்பு செய்யப்பட்டு வருகின்றன. திரையில் தோன்றி நித்யானந்தா பேசியபோது, அவருக்கு கீழே ஆங்கிலத்தில் மகாகைலாசா என எழுதப்பட்டு இருந்தது.

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு